Jul 15, 2011

பெண்ணியம் – ஓர் உரையாடலுக்கான தொடக்கம். (முடிவு)


தன்னை,மற்றும் தன் புலன்களை, பெண்ணைக் கட்டுப்படுத்த முடியாத ஆணைப் பெண்தன்மை கொண்டவன் என்று கூறும் ஆணாதிக்கம்அதனாலேயே, மிகுந்த பிடிவாதத்தோடு துறவைக் கொண்டாடுகிறதுஒருவகையில் துறவுபுலன் கட்டுப்பாடு எல்லாமே ஆணாதிக்கத் தத்துவங்களே. பண்டையத் தாய் வழிச் சமூகங்களில் துறவு என்றொரு கோட்பாடிருந்திருக்கவில்லைஅவர்கள் உலகாயதவாதிகளாக பொருள்முதல்வாதிகளாகஇன்பவியல் வாழ்வுமுறையை கடைபிடித்தவர்களாக இருந்திருக்கின்றனர்.. வேத காலம்வைதீக சிந்தனை கருத்துமுதல்வாத ஆன்மா எனும் அகத்தின் உன்னத நிலை இவையெல்லாம் தந்தை வழிச் சமூகத்தின் கோட்பாடுகள். இதுவே பெண்ணுக்கு ஞானத்தை மறுத்தது, அறிவை மறுத்தது, பெண்ணை ஆணிற்கு குழந்தை பெற்றுத் தரும் கருவியாய் அதே சமயம் ஆண் தருவதால் அவனுக்கு அடிமையாயும் இருக்க கற்பித்தது. 


அதீத  காமம் என்ற ஒன்றை பெண்தன்மை கொண்டதாக தோற்றுவித்துசமூக ஒழுக்கத்தை காமத்தைக் கட்டுப்படுத்தும் செயலை வைத்தே மதிப்பிடும் அறமாக ஆணாதிக்க அறம் தன்னை நிலை நிறுத்திக்கொண்டுள்ளது. முரணாகபக்தி இலக்கியங்களில் ஆண்கள் தங்களை நாயகியாக பாவனைச் செய்து ஆண் கடவுளைத் தொழுவர். காமமும்கலவியுமே அதன் முழுச் சாரமாக இருக்கும். பெண்ணான ஆண்டாளின் பாடல்கள் காமமாகிக் கசிந்துருகிக் கலவிக்கு ஏங்குவதாகவே பதிவாகியுள்ளதுதனது உறுப்புகள் திருமாலுக்காகக் கிளர்ந்து ஏங்கி ஏக்கத்தால் விம்மி, பொங்கி, சதா அவன் வருகைக்காக  திறந்து காத்திருப்பதாக பாடியுள்ளார். இங்கு காமம் பக்தியாகக் கடவுளின் பெயரால் கொண்டாடப்படுகிறது. மானிடருக்கு அது மறுக்கப்படுகிறது. பெண்கள் காம நாட்டத்தினால் பார்வைகளை வீசிமயக்கி விடுவர்அதுவே அவர்களது பிறப்பு என்று மநு சொல்லியிருக்கிறார். ஆண் பற்றிய இத்தகைய மதிப்பீடுகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆணுக்கு பெருமைவீரம்வலிமைஅழகுபுகழ்அறிவுகடமைஉரிமைஆள்வினைசெயலூக்கமான  பாலியல் அதிகாரம் ஆகியவைபெண்ணுக்கு பெருமை உடல் அழகுமென்மைபணிவுஅடங்கிய பாலியல்கற்பு ஒழுக்கம்வேவைச் செயல் [தாய்மை]மடமைநாணம் ஆகியவை. 

ஆண்டாண்டுக் காலமாக வகுக்கப்பட்டுள்ள இவ்வறங்களுக்கேற்ப வாழ்வதே  பெண்களுக்கு கௌரவம் நிறைந்த ஒன்று. இவற்றை ஒரு சொல்லாக, அல்லது ஒரு கேள்வியாக  முன்வைத்தால் அப்பெண் ஆண்களின் உலகத்தில் மாற்றுக் கூற முடியாத பரத்தைகுடும்பத்தை குலைக்க வந்த வேசி. இதுவே ஆண்கள் மனமுவந்து பெண்ணிக்கு இடும் நற்பெயர்கள். 

கண்டுபிடிப்புகள்தத்துவங்கள் எல்லாம் காலத்திற்கேற்பஅறிவியல் வளர்ச்சிக்கேற்பமாறிவந்திருக்கிறது. சமயச் சிந்தனைகளுக்கு தத்துவக் கோட்பாடுகள் செயல்பட்டுவந்திருக்கிறதுபின்பு 15 ஆம் நூறாண்டின் இத்தாலிய மறுமலர்ச்சிக் காலத்தில் புலனுணர்வுகளுக்கு மதிப்பளிக்கும்  தத்துவங்கள் உருவாகின்றன. பொதுக் கோட்பாடுகள் என்பவை சமூக அனுபவங்களிலிருந்து உருவாக்கப்படுபவை, ’பிறப்புக் கோட்பாடுகள்’ என்று எதுவில்லை. மனிதனே சகலவற்றிகும் பொது அளவுகோல்” என்றார் புரோட்டகோரஸ். உண்மைக்கு கூட ஒவ்வொரு தத்துவவாதிகள் ஒவ்வொரு விளகங்களை அளித்துள்ள்னர். உண்மைகளின் அளவுகோல் ஒரு கருத்தின் பயனே என்கிறது பயன்வழிக் கொள்கை (Pragmatism), அமைதியைத் தரும் பயன்பாடு உண்மை எனச் சொல்கிறார் பீர்ஸ்.

அறிவுசிந்தனைஉழைப்புஆகியவை ஒற்றை மைய அதிகாரத்திற்குள் ஆதாயங்களாக முடக்கப்படுகிறது. அவ்வாதாயம் என்பது ஒட்டுமொத்த மனிதருக்கானதாய் அல்லாமல் ஆதிக்க வர்கத்தினருக்கானதாய் இருப்பதை மார்க்சிய ஆய்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.

ஒரு புற உலகப் பொருளோடு புலனுணர்வு அனுபவங்கள் எல்லோருக்கும்  ஒன்றாக இருக்கவல்லது [பசிதாகம்வலி போன்றவை] ஆனால்  இறைமறைஒழுக்கம்புனிதம் போன்றவை அக உணர்வு சார்ந்தவை என்ப்படுகிறது. அதற்கென சிறப்புத் தகுதிகளைக் கோருவதாய் இருக்கிறது.  அது உண்மையோ இல்லையோ அத்தகுதி பெற்றவர் என்ற முத்திரை வேண்டி மனித மனத்தை தூண்டிப் பிரிதாளுகிறது கற்பனாவாத கோட்பாடுகள். அத்தகுதியை வேண்டாம் என்று நிராகரிக்கும் சுதந்திரத்தை ஆணாதிக்கச் சமூகம் தருவதில்லை. ஆணாதிக்கச் சிந்தனையானது முழுக்க முழுக்க சமய சிந்தனைகள் முன்வைக்கும் ஆன்ம’ சுத்தத்தைக் கோருவதன் மூலம் இயற்கையைபுலனுணர்வைதனிச் சக்தியாக புற உலகோடு வினையாற்றி பெறக்கூடிய தனி அனுபவங்களைஅதற்கான சுதந்திரத்தை மறுத்தலிக்கிறது என்பதை நம் பெண்கள் புரிந்துக் கொள்ளச்செய்யவேண்டும். 

இந்தியாவில் மதக் கட்டமைப்புகள் இறுகிகெட்டித்தட்டிவிட்டனஅதை அசைக்கும்ஆட்டுவிக்கும்  காரணிகள் பற்றிய அறிதலை மக்களிடம்  எடுத்துறைத்தல் தற்போதைய அவசரத் தேவை. உலகுக்கும்புலன்களுக்கும் அப்பால் ஓர் உலகமிருக்கிறதுபுலன்கள் குறைபாடுடையவை என்றக் கருத்து ஆண்மகனைத் தன் மனைவியிடம் கூட கட்டுபாடற்ற உடலுறவில் ஈடுபடுவதிலிருந்துத் தடுக்கிறது எனத் தோன்றுகிறது. அதனால் பண்டமாய் நினைக்கும் மற்ற பெண்களிடம் அச்சோதனை முயற்சிகளை செய்துப் பார்க்க ஆண்களைத் தூண்டுகிறது. பெண்ணுக்கும் இது பொருந்தும்வெளிப்படுத்தமுடியாத காம நாட்டத்தை அவள் வேற்று ஆணிடம் வெளிப்படுத்தமுடிகிறது. கட்டாய பிணைப்பு (bondage) இல்லாதி்ருத்தல் கூச்சத்தைக் கட்டுபாட்டைத் தளர்த்திவிடுகிறது. புலன்களைப் பற்றிய புரிதலும்அது உணர்ச்சியவப்படும் நிலைகளையும்இயற்கை சார்ந்த பார்வையுடன் கூடிய பாலியல் கல்வி ஆண் பெண் உறவில் முக்கியத்துவம் வாய்ந்தது. குறிப்பாக தொடு உணர்ச்சிகளை அகத் தூய்மை’ என்ற கற்பனாவாத கருத்தாக்கத்தைத் தாண்டிஇயல்பாக எப்படி அவற்றை எதிர் கொள்வதுஅவ்வுணர்ச்சி நிலைகள் காதல்’ என்ற புரிதலை எவ்வாறு விதைக்கிறது போன்ற உரையாடல்கள் பெண்களை பாலியல் சுரண்டல்களிலிருந்து காக்க உதவும். இங்கு வழங்கப்படும் கல்வியும் ஆண் தன்மை கொண்டதாகவே இருக்கிறது. 

ஒழுக்கக்  கோட்பாடுகள்பாவம்புண்ணியம்தண்டனை என்று முழங்கும்  சமூகத்தில் தான் எயிட்ஸ்  முதன்மையிடம் வகிக்கிறதுபெண்கள்சிறுமிகள், குழந்தைகள் வல்லுறவுகளுக்கு ஆளாகுகிறார்கள்கொலைகொள்ளைஊழல் என்று சகலவிதமான உடல்உழைப்புபொருளாதார சுரண்டல்கள் தலைவிரித்தாடுகின்றன.  

இயற்கையிலேயே  பெண் பலகீனமானவள் என்பது முற்றிலுமாக மறுத்தலிக்கப்படவேண்டும். ஒருவேளை [அழுத்தமாக] அவள் பலகீனமாக இருந்தாலும்அவளை ஒடுக்குவதற்கு எவருக்கும் உரிமை இல்லை. தாய்வழிச் சமூக நிலைமைகளுக்கு திரும்புவோமாயின் அவளுக்கு பலமான’ ஆண்கள் பாதுகாவலர்களாக இருக்கும் பேறுதவி தேவைபடப்போவதில்லை. இன்னொரு ஆண் துன்புறுத்தாத வரையில் அவளுக்கு ஆண் துணை பாதுகாப்பையொட்டி எப்பொழுதும் தேவைப்படுவதில்லை. பல ஆண்டுகாலமாய் பெண்கள் வீட்டிலேயே முடக்கப்பட்டதன் காரணமாக உடல் வலிமை சார்ந்த பயிற்சிகளில் ஈடுபடமுடியாமல் போனது. ஆண்களுக்கு நிகராய் அவர்களும் அத்தகையப் பயிற்சிகளை எடுத்துக் கொண்டால் பெண்ணும் பலசாலியாகிவிடுவாள் என்பதில் ஐயமில்லை. மேலும் உடல் சக்தி’ என்பது பயிற்சியால்வேலை முறைகளால் வடிவமைக்கக்கூடிய ஒன்று என்று நம் பெண்கள் புரிந்துக் கொள்ளுதல்இயற்கையைக் காரணம் காட்டி நம் மீது ஏவப்படும் ஒடுக்குமுறைகளுக்கு செவி சாய்க்க வேண்டியதில்லை எனும் உண்மையை உணர்த்தும்.

வன்முறைக் குற்றங்களில் பெண்ணின் பங்கு  சொற்பமானது. சமூகப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுவிட்டால் எவரும் எவரையும் பாதுகாக்க வேண்டியதில்லை. ஆண்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறதுஇதற்கு எவ்வகையிலும் பெண்களும்பெண் விடுதலைப் போராட்டங்களும் காரணமில்லையே. பெண்ணிய சிந்தனை ஆண்களுக்கும் விடுதலை அளிக்கவல்லது என்பதை ஆண்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 நம் சமூகத்தில் வன்முறைபொருளாதார  ஏற்றத்தாழ்வுசாதி இவை மட்டுமே  ஒடுக்குமுறையின் வடிவங்களாகக் கணக்கில் கொள்ளப்படுகிறது.  மனித உணர்ச்சிகளின் மேல்சிந்தனைகளின் மேல் செலுத்தப்படும் கருத்தாக்க ஒடுக்குமுறைகள் முக்கியத்துவமற்றவைஒருவேளை அவை பரிசீலனைக்குட்படுத்தப்படுமாயின் அது ஆண்களின் நலன் கருதியதாக இருத்தல் அவசியம் எனும் நிலைதான் நிலவுகிறது. 

பெண்  விடுதலை என்பது புரட்சிகரமான அறிக்கைகளினாலும்ஆண்களை வசைபாடுவதாலும்நாகரீகத் தோற்றத்தினாலும் திடீர் என்று ஒரு நாள் நம் கையில் தானாய் கனிந்து விழக்கூடிய பழமன்று.  ஆணாதிக்க முறைமையால் ஆண்களுக்கும்பெண்களுக்கும் மாறுபட்ட பாலினத் தேர்வுக்கொண்டவருக்கும் எதிராக தொடுக்கப்படும் ஒடுக்குமுறைகளை சரியாக புரிந்துக்கொண்டு அனைவரும் ஒன்று சேர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டிய ஒன்று.

சீமாட்டிகளுக்கும்நாகரீக கோமான்களுக்கும் மட்டுமான ஒன்று அல்ல பெண்ணியம். சொல்லப்போனால்அடித்தட்டு பெண்களுக்கும்கல்வி அறிவற்ற சமூகத்தவருக்கும்பால் பேத அடிப்படையில் குறைந்த கூலி வாங்கும் பாட்டாளி வர்க்கத்துப் பெண்களுக்காகவும் கூடுதலாக கவனம் செலுத்தவேண்டிய ஒன்று. கம்யுனிஸ்ட் கட்சி அறிக்கையைப் போன்று வர்க்க அடிப்படையிலானசாதி மனநிலையைக் கணக்கில் கொண்டும்பொருளாதாரம்கல்வி நிலையில் பின்னடைவு ஆகியவைகளை நினைவில் கொண்டும் பெண்ணியத்திற்கான  ஒரு அறிக்கையைத் தயார் செய்தல் அவசியமாகிறது.

அம்மக்களிடத்து  பண்பாட்டு மீறல்பண்பாட்டுக்  காவல் இரண்டுமற்ற கண்ணோட்டத்துடன் ஆணின் பங்கையும்குடும்ப அமைப்பின் முக்கியத்துவத்தையும் அங்கிகரிக்கும் வகையான உரையாடலைத் துவங்குதல் முக்கியம் எனக் கருதுகிறேன். அதே வேளை கூட்டுச் சமூக வாழ்வின் பயன்களையும்அதற்கு எதிராய் குடும்பம் என்பது சுயநலத் தன்மைக் கொண்டதாக விளங்குகிறது என்பதையும்மனித உறவுகளை இரத்த உறவுகளாய் சுருக்குவதன் மூலம் முதலாளிகள்ஆதிக்க சக்திகள்மத நிறுவனங்கள் சமூகத்தில் விதைக்கக் கூடிய ஆபத்தான கருத்தாக்கங்கள் எடுத்துரைக்கப்படவேண்டும்.

 நம்  அறிவு நிலைகள்உழைப்பு  ஆகியவை எப்படி மற்றவரின்  கட்டுப்பாட்டில் இயங்குகிறது  என்ற உளவியலை மையமாகக் கொண்டிருத்தல் உதவும். இது நேரடியாக ஆண் பெண் நடவடிக்கைகளைச் சாடாதுஅறியாமையை சுட்டிக் காட்டுவதாக அமைக்கபெறும். அவற்றோடு தொன்மைச் சமுதாயத்தில் பெண்ணின் பங்குசடங்குகளில் அவளுக்களிக்கப்பட்ட முதன்மை நிலை ஆகிய வரலாற்றுச் சான்றுகளைக் கொண்ட வெளிப்பாடுகள் தொடர்புப்படுத்தலுக்கு ஏற்புடையதாய் அமையலாம். இவற்றோடு பெண்களுக்கென்று சில ஆணாதிக்கத் தற்காப்புச் சிந்தனைகளை” வலியுறுத்த வேண்டும் அது அழகியல்பொருளாதார மேன்மை நிறைந்த வாழ்வுகௌரவம்சமூக அங்கிகாரம் இவற்றின் மேல் அதீத நாட்டம் பற்றியத் திணிப்பிலிருந்து பெண்கள் எப்படி தங்களைத் தற்காத்துக் கொள்ளுதல் என்பனவற்றை உள்ளடக்கியதாய் ஒரு திட்ட வரைவாய் மேற்கொள்ளப் படவேண்டும். 

இந்தியாவில் நடைபெறும் கொலைகள்மற்றும்  தற்கொலைகளில் கணிசமானவை  கலாச்சாரக் காரணங்களுக்காக நடைபெறுகின்றன என்று பதிவு செய்திருக்கிறார் அசோகன் முத்துசுவாமி,. கப் பஞ்சாயத்து பற்றிய ஒரு தொகுப்பில். 2003 ஆம் ஆண்டு முசாபர்பூர் மாவட்டத்தில் மட்டும் அதே மாதங்களில் 13 கௌரவக் கொலைகள் நடந்துள்ளன. ஜனநாயக மாதர் சங்கம் திரட்டியுள்ள தகவல்களின்படி, 2007ம் ஆண்டு வெறும் நான்கு மாத காலத்திற்குள் 107 கவுரவக் கொலைகள் ஹரியானாவில் நடந்துள்ளன. இதன் பின்னணியில் சாதிபொருளாதாரகலாச்சார காரணங்கள் நிலவுகின்றன. தமிழகத்தில் பார்ப்பனிய-இந்துத்துவ-கலாச்சார கௌரவத்  தாக்கம் சற்றுக் குறைவாக இருப்பதற்கு நாம் பெரியாருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். 

தருக்கம்  என்பது இரு தரப்பையும் நியாயப்படுத்தக்கூடியது. ஆனால் கற்பனாவாத புனிதத்தன்மைமுன் முடிவுகள்அனுபவ ஒப்பீடுகள் எதிர் தரப்பை ஏற்க மறுக்கிறது. ஏற்க மறுப்பது அவர் அவர் சுதந்திரம் என்றாலும்அது எதிர் தரப்பென்று ஒன்று நிலவுவதையே ஒடுக்க நிணைக்கும் மனநிலையே பொதுப் பண்புகளுக்கெதிரான பெண்ணியக் கேள்விகளைப் புரந்தள்ளச் செய்கிறது. பொதுப் பண்புகளை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளும் சுதந்திரம் நிலவுவது போல்அதை மறுக்கும் சுதந்திரமும் பொருட்படுத்தவேண்டிய ஒன்று. அத்தகைய மறுப்புக்குரலாக பெண்ணியக் குரல் உள்ளது. தற்போது கடைப் பிடிக்கப்படும் பண்புகளுக்குள்ளேயே நின்று உரையாடுவது பெண் விடுதலைப் பாதையில் ஓர் முடக்கம். புது பண்புகளைபெண்களுக்கான பண்புகளை பெண்கள் உருவாக்க வேண்டும். சாதிமதம்புனிதக் கோட்பாடுகள்பொருளாதார தற்காப்பு இவைகளை மீறிய பண்புகளை மார்க்சிய வழி பெண்ணிய சிந்தனைகளைக் கொண்டு உருவாக்கப்பட வேண்டும்நடைமுறைப்படுத்த வேண்டும். அது மனிதனை இயற்கையோடு இணைக்கும் தன்மைக் கொண்டதாகவும்மனிதரை மனிதராக (ரிஷி நிலைக்கு உயர்த்தாத) அங்கிகரிக்கும் தன்மைக் கொண்டதாகவும் இருக்கும் என்று உறுதி கூறலாம். 

உதவிய நூலகள் மற்றும்  சுட்டிகள்:
1.     உலகாயதம்தேவி பிரசாத் சட்டோபாத்யாயதமிழில் தோதாத்ரிஎன்.சி.பி.எச், 2009
2.     மார்க்சியம் – பெண்ணியம்: உறவும் முரணும்வெ. கோவிந்தசாமிநடராஜ்விடியல் பதிப்பகம், 1998.
3.     குடும்பம்அரசுதனிச்சொத்து ஆகியவற்றின் தோற்றம்எங்கெல்ஸ்தொகுப்பு பக்தவத்சல பாரதி.
4.     பெண்ணியச்  சுவடுகள்முனைவர் வாசுகி  ஜெயரத்னம், 2009, அறிவுப் பதிப்பகம்.
5.     சோசலிசமும்பதபீடங்களும்ரோசா லக்சம்பர்க்தமிழில் ராமசந்திர வைத்தியநாத்பாரதி புத்தகாலயம், 2009
6.  மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைப் படியில் உழைப்பின் பாத்திரம்எங்கெல்ஸ்முன்னேற்றப் பதிப்பகம்மாஸ்கோ,
7.     கப்’ பஞ்சாயத்து: சாதியின் மற்றொரு கோரமுகம்அசோகன் முத்துசாமிபாரதி புத்தகாலயம், 2010.
8.     மார்க்சியக் கட்டுரைகள்ந. முத்துமோகன்காவ்யா, 2007.
9.    Rosa Luxemberg – Her Life and Work, Paul Frolich, Translated by Edward Fitzgerald, Victor Gollancz Ltd, London.

    * http://ncrb.nic.in/
    * http://www.census.gov/ipc/prod/wid-9803.pdf
    * http://www.swayam.info/swayam_gi_leaflet_31mar.pdf
    * http://www.sparrowonline.org/

** http://www.azadindia.org/social-issues/crime-against-women-in-india.html

நன்றி – உயிர் எழுத்து

No comments:

Post a Comment